search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் பைப்பில் தண்ணீர் வராததால் ஊராட்சி தலைவரின் கணவரை தாக்கி கொலை மிரட்டல்
    X

    குடிநீர் பைப்பில் தண்ணீர் வராததால் ஊராட்சி தலைவரின் கணவரை தாக்கி கொலை மிரட்டல்

    • பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தைச் சேர்ந்தவர் குடிநீர் பைப்பில் தண்ணீர் வராததால் ஊராட்சி தலைவரின் கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • இந்த மிரட்டலில் ஈடுப்பட்ட லாரி டிரைவருக்கு வலைவீச்சு

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (45) . இவரது மனைவி சங்கீதா. வில்லிபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (47) லாரி டிரைவர்.

    இவரது வீட்டிற்கு பஞ்சாயத்து குடிநீர் பைப்பில் இருந்து தண்ணீர் வரவில்லை என அடிக்கடி ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சதீஷ்குமார் வில்லிபாளையம் ஊராட்சி மன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா இல்லாததால் அவரது கணவர் நடராஜனுக்கு போன் செய்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

    அங்கு வந்த நடராஜனை ஏன் பைப்பில் தண்ணீரை வரவில்லை எனக்கூறி அவரை தரைக்குறைவாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நடராஜன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×