என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுரண்டை அருகே கோவில் உண்டியலை திருடியவர் கைது
- கோவிலில் புகுந்த மர்ம நபர் கேட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
- திருட்டில் ஈடுபட்டது அருணாசலம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
சுரண்டை அருகே உள்ள குலையநேரியில் சூரி முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புகுந்த மர்ம நபர் ஒருவர் கேட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் அங்கு இருந்த சில்வர் உண்டியலை பெயர்த்து எடுத்து தூக்கி சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து கோவில் பூசாரி சென்று பார்த்தபோது அங்கு உண்டியல் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சுரண்ைட போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் உண்டியலை தூக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே ஊரில் வடக்கு தெருவில் வசிக்கும் அருணாசலம் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து உண்டியலை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்