search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிச்சி குளக்கரையில் கோவில் முன்பு உள்ள குப்பை தொட்டியை அகற்ற வேண்டும்
    X

    குறிச்சி குளக்கரையில் கோவில் முன்பு உள்ள குப்பை தொட்டியை அகற்ற வேண்டும்

    • பொங்காளி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
    • குப்பை தொட்டி வைத்தது, கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை-பொள்ளாச்சி ரோடு குறிச்சி குளக்கரையில் பொங்காளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

    கோவையை காக்கும் கோனியம்மன் என்பது போன்று, குறிச்சி, சுந்தராபுரம் பகுதி மக்களை காக்கும் குறிச்சி பொங்காளியம்மன் என்று பக்தர்களால் இந்த கோவில் போற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த கோவிலின் முன்பு, மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறியதாவது:-

    குறிச்சியில் அமைந்துள்ள பொங்காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இந்த வழியே செல்லும் அனைவரும் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டே செல்வார்கள்.

    இந்நிலையில் கோவிலுக்கு முன்பாக அம்மனின் கருவறைக்கு நேர் எதிரே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியாக உள்ளது.

    கோவில் முன்பு குப்பை தொட்டி வை த்தது, கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே கோவில் கருவறைக்கு நேர் எதிரே வைக்கப்பட்டிருக்கும் அந்த குப்பைத் தொட்டியை அகற்றி, குளத்தை ஒட்டி வைத்தால், கோவிலின் புனித தன்மை பாதுகாக்கப்படும். கோவிலின் முன்பாக சிதறி கிடக்கும் குப்பைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு வழியாகும். எனவே கோவை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×