search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு-  பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
    X

    தூத்துக்குடியில் அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

    • விக்னேஷ் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • கண்ணன், ஆசிக் ஆகியோருடன் விக்னேஷ் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன் விக்னேஷ்(வயது 17). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    மின்கம்பத்தில் மோதல்

    நேற்று இரவு தனது உறவினரான லாரி டிரைவர் கண்ணன்(29), நண்பர் ஆசிக்(18) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திருச்செந்தூர் சாலையில் சத்யா நகர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேர் மீதும் அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதியது.

    பலி

    இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆசிக் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த கண்ணனுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் இறந்தார். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×