என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்சில் இருந்து பெண்களை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர்
- திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.
- இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர்.
நாமக்கல்:
ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் பேப்பர் மில், காவேரி ஆர்.எஸ், ஆயக்காட்டூர் கார்னர், ஓட பள்ளி, கொக்கராயன் பேட்டை வழியே அரசு டவுன் பஸ் திருச்செங்கோடு வரை செல்கிறது. இந்த பஸ்சில் திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.
பேப்பர் மில் காலனி ரோட்டில் செல்லாமல் ஓட பள்ளி ரோட்டில் பஸ் சென்றது. இதனை கவனித்த திருச்செங்கோடு செல்லும் பெண்கள் சிலர், பஸ் வேறு பாதையில் செல்வதால், பஸ்சை நிறுத்துமாறு சத்தமிட்டனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் கண்டக்டரை திட்டினார்.
அப்போது அந்த பெண்கள், நாங்கள் திருச்செங்கோடு செல்ல வேண்டும், ஆனால் பஸ் நேராக செல்கிறது என்றனர். இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசு பெண்களுக்காக இலவச பஸ்களை இயக்குகிறது. ஆனால் சில கண்டக்டர்கள் அவர்களை மதிக்காமல் நடுவழியில் கீழே இறக்கி விடுவது வேதனையாக இருப்பதாக பெண் பயணிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்