என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
- ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 439 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு 439 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
- 2020-2021-ம் ஆண்டில் பசுைம வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் ேமற்கொள்ளப்பட உள்ளது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி பன்னிமாரா பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், அண்ணா நகர் பகுதியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பழங்குடியினர்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 35 ஊராட்சிகளில் மக்களின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து அதனை விரைவாகவும், தரமாகவும் முடித்திடவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை விரைவில் தொடங்கி தரமான முறையில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 2019-2020ம் ஆண்டில் 917 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு 903 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 439 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு 439 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2021-2022 ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 1,507 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 313 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் 109 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2020-2021-ம் ஆண்டில் பசுைம வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் ேமற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 196 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு 97 வீடுகள் முடிக்கப்பட்டுள்து. மீதமுள்ள வீடுகள் பல்வேறு நிலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதேபோல் மாவ ட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக மேற்கொண்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், வீடுகள் கட்டி முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட பயனாளி களிடம் ஒப்படைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விஜயா, உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் உள்ளனர்.






