என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான கொள்ளையன் சிறையில் அடைப்பு
- புதுக்கோட்டை கோவிலில் திருட்டுகைதான கொள்ளையன் சிறையில் அடைப்பு
- கைதான கொள்ளையன் சிறையில் அடைப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நமண சமுத்திரம் செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் கடந்த மாதம் 17-ந் தேதி மர்ம நபர்கள் நகை திருடி சென்றனர்.
அதேபோன்று கடந்த ஜூன் 29-ந் தேதி புதுக்கோட்டை கீழா நெல்லிக்கோட்டை அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் நகைகள் காணாமல் போனது. இந்த இரு வழக்குகளிலும் துப்பு துலக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மேற்பார்வையில் பொன்னமராவதி சப்-டிவிஷனில் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இதில் மேற்கண்ட இரு சம்பவங்களிலும் புதுக்கோட்டை திருமயம் தாலுகா நச்சான்றுபட்டி மலையலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த கார்த்திகை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடமிருந்து 41 பவுன் நகைகளை கைப்பற்றினர். பின்னர் கொள்ளையன் கார்த்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். குற்றவாளியை பிடிக்க உதவிய தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெகுவாக பாராட்டினார்.






