search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    தேரோட்டம் நடந்தது.

    மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    • பக்தர்கள் அலகு காவடி, கரகம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
    • துரும்பூர், பாதிரிமேடு முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் சர்வசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

    அதுசமயம் முதல் நாள் காலையில் பக்தர்கள் அலகு காவடி, கரகம் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் செடில் திருவிழா நடைபெற்றது.

    இரண்டாவதுநாள் தேர்த்திருவிழா நடை பெற்றது.துரும்பூர், பாதிரிமேடு முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    விழாவில் துரும்பூர், பாதிரமேடு கிராமவாசிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை நாட்டாமைகள், கிராம வாசிகள் மற்றும்விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×