search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூா் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி தொடக்கம்
    X

    புதிய செயலியை மேயர் சண். ராமநாதன் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூா் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி தொடக்கம்

    • பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம்.
    • பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை, சொத்து வரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது குறைகளையும் மனுக்களையும் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த புதிய செயலியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடியே குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம்.

    குப்பைகள் இருந்தாலோ, கழிவு நீர் தேங்கி இருந்தாலோ, கால்நடைகளால் தொல்லை ஏற்பட்டாலோ புகைப்படங்களுடன் தெரிவி த்தால் உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

    செயலியில் பதிவான குறைகளை அனைத்து பிரிவு அதிகாரிகளும் கண்காணிப்பதால் உடனடியாக பிரச்சனையை தீர்வு செய்ய முடியும்.

    தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் தான் இந்த புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த செயலி மூலம் பொது மக்களுக்கு தேவையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையையும் கொண்டு வந்துள்ளோம்.

    விரைவில் இந்த செயலி மூலம் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை, சொத்து வரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்த புதிய செயலி மூலம் குறைகள், மனுக்களை எவ்வாறு தெரிவிப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×