search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு
    X

    அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு

    • இளநீர், பால், தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தில் அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வரும் வள்ளி தெய்வானை சமேத ஒரு முகம் ஆறு கரங்களை கொண்ட அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு திரவியங்கள் பழச்சார் பஞ்சாமிர்தம் தேன் பன்னீர் இளநீர் பால் தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு சுவாமி விபூதி அலங்காரம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியரை வழிபட்டனர்.

    Next Story
    ×