search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலய சப்பர பவனி
    X

    சப்பர பவனி நடந்தது.

    ஆலய சப்பர பவனி

    • அதன்படி நிகழாண்டிற்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருப்பூண்டி அடுத்த சோழவித்யாபுரத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தின் உபகோவிலான புனித சந்தனமாதா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நிகழாண்டிற்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, அந்தோணியார், சூசையப்பர், சுவக்கின், சந்தனமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, வேளாங்கண்ணி தியான இல்லத்தின் இயக்குனர் செபஸ்தியான் தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது.

    பின்னர், புனிதம் செய்ததை தொடர்ந்து சப்பரம் ஆலய வளாகத்திலிருந்து தொடங்கியது.முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×