என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காலபைரவர்.
வன்மீகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
- கால பைரவருக்கு மஞ்சள், பால், திரவியம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம்.
- வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த சீயாத்தமங்கை கிராமத்தில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கால பைரவர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி கால பைரவருக்கு மஞ்சள், பால், திரவியம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
Next Story






