என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கோத்தகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கோத்தகிரி அருகே உள்ள அந்தியூர்மட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே உள்ள அந்தியூர்மட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

    கார்த்திக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவில் கார்த்திக்கின் தந்தை வேலைமுடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கார்த்திக் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    மேலும் சோலூர் மட்டம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×