என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
    X

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

    • வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த யுவராஜ் தவறி சாலையில் விழுந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகில் உள்ள செட்டிசிமிழியை சேர்ந்தவர் உலகநாதன் மகன் யுவராஜ் (வயது 20). இவர் கட்டட வேலை செய்து வந்தார்.

    இவரும் இவரது நண்பர் அரவிந்த் (22) என்பவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்போது கொரடா ச்சேரி அருகே ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கிய போது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த யுவராஜ் தவறி சாலையில் விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த யுவராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×