என் மலர்
உள்ளூர் செய்திகள்

'விஜய்' கட்சி சார்பில் ஏழைப் பெண்ணுக்கு 'டீக்கடை'- புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார்
- கட்சி சார்பில் அவருக்கு உதவும்படி விஜய் உத்தரவிட்டார்.
- ரிஸ்வான், புஷ்பராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் புதிய ‘தேநீர் விடுதி’ அமைத்து கொடுத்தனர்.
சென்னை:
சென்னை முடிச்சூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் பனையூரில் அலுவலக உள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு நேரில் வந்து தனது வாழ்வாதாரத்திற்கு உதவும் படி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்திடம் கோரிக்கை அளித்தார். லட்சுமி கோரிக்கையை கட்சி தலைவர் விஜய் கவனத்துக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் கொண்டு சென்றார். இதையடுத்து கட்சி சார்பில் அவருக்கு உதவும்படி விஜய் உத்தரவிட்டார்.
விஜய் உத்தரவுக்கிணங்க ஏழைப் பெண்ணான லட்சுமிக்கு முடிச்சூர் பகுதி நிர்வாகிகள் தயா, ரிஸ்வான், புஷ்பராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் புதிய 'தேநீர் விடுதி' அமைத்து கொடுத்தனர். புதிய கடையை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இ.சி.ஆர். சரவணன் உள்பட செங்கல்பட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வேங்கடமங்கலம் ஊராட்சி ரத்தின மங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு 52 பிளாஸ்டிக் சேர்கள், 10 பாய், 3 குக்கர், 50 சில்வர் தட்டு, 30 லஞ்ச் பேக், 2 குப்பை கூடை, 2 வாளி, 2 தண்ணீர் கேன், குழந்தைகளுக்கு பிஸ்கட், இனிப்பு போன்ற பொருட்களை கட்சி சார்பில் பொதுச் செயலாளர் ஆனந்த் வழங்கினார்.
திருப்போரூர் ஒன்றிய த.வெ.க. சார்பில் நிர்வாகிகள் வி.கே.ஆர்.எஸ். தியாகு, தீனா ஆகியோர் ஏற்பாட்டில் மேலைக் கோட்டூரில் அமைந்துள்ள மேகநாதன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 150 பெண்களுக்கு புடவை, சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புருஷோத்தமன் நகரில் ஃபெஞ்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், ராஜ்குமார் ஏற்பாட்டில் அரிசி, காய்கறிகள், போர்வை ஆகிய பொருட்களை வீடு வீடாக சென்று நிவாரண பொருட்கள் வழங்கினார்.






