என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரணியில் நாதஸ்வர பயிற்சி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- நாதஸ்வர பயிற்சிக்கு சென்ற இடத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம் அதிகந்தூர் அடுத்த கடப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நாகராஜ் (வயது16). இவர் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தில் சண்முகம் என்பவர் வீட்டில் தங்கி நாதஸ்வர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
பயிற்சியின்போது நாகராஜ் திருமணம், கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்து இருக்கிறார். நாகராஜ் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணுடன் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பெண் இவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் நாகராஜ் மன உளைச்சலில் காணப்பட்டார்.
நேற்று பயிற்சிகளை முடித்துவிட்டு மாலை வீட்டு மாடிக்கு சென்றார். அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த நாகராஜை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நாகராஜின் தந்தை கணேசன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாதஸ்வர பயிற்சிக்கு சென்ற இடத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்