search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் அருகே வடமாநில வியாபாரி கொலையில் வாலிபர் கைது
    X

    திருச்செந்தூர் அருகே வடமாநில வியாபாரி கொலையில் வாலிபர் கைது

    • வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வினோத்தை மர்மநபர் அம்மி கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.
    • போலீசார் விரைந்து சென்று கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    திருச்செந்தூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 29). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ராஜ் கண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கி ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வினோத்தை மர்மநபர் அம்மி கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரணை நடத்தினார்.

    ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த வினோத் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் கந்தசாமி (22) என்பவர் வினோத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கந்தசாமியை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் வீரபாண்டியபட்டணம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கந்தசாமி அளித்த வாக்குமூலத்தில், இறந்து போன வினோத் தெரு பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு செய்வான். அதை தட்டிக் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக கூறினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×