என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூவத்தூர் அருகே பஸ்சில் கண்டக்டரிடம் செல்போன் திருட்டு வாலிபர் கைது
- முகையூரை சேர்ந்த நிர்மல் பஸ்சுக்குள் ஏறி தூங்கி கொண்டிருந்த கண்டக்டரின் செல்போனை எடுத்து விட்டு, டிரைவர் போனை திருடினார்.
- நிர்மலை கூவத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கூவத்தூர் அடுத்த முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு தனியார் பஸ்சை நிறுத்தி விட்டு, அதன் டிரைவரும், கண்டக்டரும் தூங்கினர். அப்போது முகையூரை சேர்ந்த நிர்மல் (26) என்பவர் பஸ்சுக்குள் ஏறி தூங்கி கொண்டிருந்த கண்டக்டரின் செல்போனை எடுத்து விட்டு, டிரைவர் போனை திருடினார்.
டிரைவர் போனை எடுத்த போது சிக்கிக்கொண்டார். இதையடுத்து நிர்மலை கூவத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






