என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேம்பால மின்கம்பத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி- போலீசார் விசாரணை
- பாலத்தில் இருந்த மின்கம்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் நாராணயன மடம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 62). இவர் ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் ரவீந்திரன் சிக்கினார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர் ஊன்றுகோல் உதவியுடன் நடக்க முடிந்தது.
கால் ஊனமானதன் காரணமாக ரவீந்திரன் வேலை பார்க்க முடியவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். விபத்தில் ஏற்பட்ட ஊனத்தால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ரவீந்திரன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு ரவீந்திரன் விருதுநகரில் அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு நடந்து சென்றார். அங்குள்ள மின்கம்பம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலத்தில் உள்ள மின்கம்பத்தில் ரவீந்திரன் பிணமாக தொங்குவதை இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் கால் ஊனமாகி வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் வாழ்வில் விரக்தி ஏற்பட்டு ரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பாலத்தில் இருந்த மின்கம்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்