search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவாகரத்து ஆன பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்
    X

    விவாகரத்து ஆன பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்

    • செல்போனில் பேசும் போது அருண்குமார் எனது குடும்பம் மற்றும் சொத்து விபரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.
    • அருண்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் 43 வயது இளம்பெண்.

    இவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணமாகி கணவர் உள்ளார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில் எனக்கும் எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து நாங்கள் சட்டப்படி விவாகரத்து பெற்றோம்.

    இதனால் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன்.

    கடந்த மாதம் 12-ந்தேதி நான் தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றேன். அப்போது எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நான் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் எனக்கு உதவிகள் செய்தார். அவருடன் நான் நெருங்கி பழகினேன். அவர் என்னிடம் தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையத்தை சேர்ந்த அருண்குமார்(வயது42) என கூறினார்.

    மேலும் அவர் மருந்து விற்பனை பிரதிநியாக வேலை பார்ப்பதாக கூறினார். இதனையடுத்து நாங்கள் செல்போன் எண்களை பறிமாற்றிக்கொண்டோம்.

    பின்னர் நான் கோவைக்கு புறப்பட்டு வந்தேன். அதன் பின்பு நாங்கள் செல்போன் மூலமாக அடிக்கடி பேசி பழகி வந்தோம். அப்போது எங்களுக்கு இடையே நெருக்கம் அதிகமானது. நாங்கள் செல்போனில் பேசும் போது அருண்குமார் எனது குடும்பம் மற்றும் சொத்து விபரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் என்னை பார்க்க வேண்டும் என கூறினார். அதன்பின்னர் அவர் கோவைக்கு புறப்பட்டு வந்தார். அவரை நான் எனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றேன்.

    அப்போது நாங்கள் 2 பேரும் பலமுறை ஜாலியாக இருந்தோம். இந்த நிலையில் திடீரென அவர், என்னிடம் பணம் கேட்டார். நான் கொடுக்க மறுத்தேன்.

    இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் என்னை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் ஜாலியாக இருந்து விட்டு பணம் கேட்டு மிரட்டிய அருண்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×