search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்த கிராம மக்கள்
    X

    பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்த கிராம மக்கள்

    • கோவில் பயன்பாட்டிற்காக விட வேண்டும், அந்த இடத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகம் கட்டக்கூடாது.
    • இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே சடையப்பபுரத்தில் சந்தன மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வெற்றிடத்தை அப்பகுதி பொதுமக்கள் இதுநாள் வரை பயன்படுத்தி வந்தனர்.

    சுமார் 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வழிபாட்டு இடத்தை மறைமுகமாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    எனவே அலுவலகத்திற்கு கையகப்படுத்தியதில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பதாக கூறி அதனை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக சடையப்பபுரம் ஊர் பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    அந்த இடத்தை கோவில் பயன்பாட்டிற்காக விட வேண்டும், அந்த இடத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகம் கட்டக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×