search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பு கொடியுடன் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
    X

    கருப்பு கொடியுடன் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

    • மக்கள், பெரியவர்கள் என அனைவரும் கையில் கருப்பு கொடியை ஏந்தி கோவில் முன்பாக அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் சிங்காரக்கோட்டை அருகே எஸ்.பாறைப்பட்டியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் வருடம் தோறும் இங்குள்ள காளியம்மன், விநாயகர், கருப்பண்ணசாமி மற்றும் முனியாண்டி கோவில் திருவிழாவை நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை 2 நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி, தனபால், முருகன். ஆகிய 3 பேர் தூண்டுதலின் பேரில் ஊர் திருவிழாவை நடத்த விடாமல் சிலர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து விட்டு ஊரை காலி செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

    மேலும் இந்த நிலையில் ஊர் பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கையில் கருப்பு கொடியை ஏந்தி கோவில் முன்பாக அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதன் வரிசையில் பாறைப்பட்டி கிராமமும் இணைந்துள்ளது.

    Next Story
    ×