என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய எருசலேம் வடிவில் கட்டப்பட்ட குடிலை அமைச்சர் திறந்து வைத்தார்- விஜய் வசந்த் பங்கேற்பு
- புதிய எருசலேம் வடிவில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் குடிலினை கண்டுகளித்தனர்.
உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு பாலனின் பிறப்பை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது
.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் சீரியல் குடில்கள் தெரு வீதிகளில் அலங்காரம் என களைகட்ட துவங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலப்பள்ளம் வின் ஸ்டார் போட்ஸ் கிளப் சார்பில் சுமார் 40 லட்ச ரூபாய் பொருட் செலவில் வைக்கோல் கம்பிகள் சிமெண்ட் போன்ற உபகரணங்களால் புதிய எருசலேம் வடிவில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எருசலேம் குடிலின் உட்பகுதிகளில் இயேசு பாலனின் பிறப்பு முதல் சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்து நியாயவிசாரிப்பு வரையிலான சுருபங்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குடிலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். மேலும் திறப்பு விழாவிற்கு வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு ஆளுயர மாலை அணிவித்தும், செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பும் அளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் குடிலினை கண்டுகளித்தனர்.






