என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் அறிமுக கூட்டம்
- இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்தியா கூட்டணி கட்சிக்கு உட்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் தலைமை வகித்தார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் அறிமுக கூட்டம் வேர்கிளம்பியில் நடைபெற்றது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிக்கு உட்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி தோழர் ராஜ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக நிர்வாகி காதர் மொய்தீன் மதிமுக நிர்வாகி ஜேபி சிங், உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இந்தியா கூட்டணி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க அனைவரும் உழைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்