என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிதி தொடர்பாக சரியான செய்தி வெளியிட வேண்டும்- தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் வசந்த் வலியுறுத்தல்
    X

    நிதி தொடர்பாக சரியான செய்தி வெளியிட வேண்டும்- தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் வசந்த் வலியுறுத்தல்

    • ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.
    • நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நிதி தொடர்பாக தவறாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் வச்ந்த் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஒதுக்கிய 17 கோடி ரூபாய் முழுவதும் (100%) மக்கள் நல திட்டங்களுக்காக செலவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.

    இன்று அந்த நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும் என கேட்டு கொண்டேன்.

    தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×