search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நூல் மில்லில் தீ விபத்து
    X

    தனியார் நூல் மில்லில் தீ விபத்து

    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் தனியார் நூல் மில் உள்ளது. இன்று காலை 10 மணியளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பற்றி எரியவே, தொழிலாளர்கள் ஆலையில் இருந்து உடனே வெளியேறினர். மேலும் இது குறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து 15 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.


    தீ விபத்தில் ஆலையில் இருந்த எந்திரங்கள், குடோனில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் என ரூ.4 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நூற்பாலையில் தீ பற்றி எரிவதையும், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைப்பதையும் படத்தில் காணலாம்.

    Next Story
    ×