search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூர் அரசு தொடக்கப்பள்ளியில் பூட்டை உடைத்து சான்றிதழ்கள், சத்துணவு பொருட்கள் திருட்டு
    X

    திருவொற்றியூர் அரசு தொடக்கப்பள்ளியில் பூட்டை உடைத்து சான்றிதழ்கள், சத்துணவு பொருட்கள் திருட்டு

    • பள்ளி கதவு திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தலைமை ஆசிரியை சசிரேகா திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் தொடக்கப் பள்ளியில் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி ஆவணங்களை அருகில் உள்ள மார்க்கெட் லேன் அரசு தொடக்கப்பள்ளியில் அலுவலக உதவியாளர் பள்ளி அறையில் பதிவேடுகள் சான்றிதழ்கள் சத்துணவு பொருட்கள் ஆகியவற்றை வைத்து பூட்டி விட்டு சென்றார்.

    நேற்று பள்ளி கதவு திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். தலைமை ஆசிரியை சசிரேகா சென்று பார்த்த போது பதிவேடுகள், சான்றிதழ்கள், விளையாட்டு பொருட்கள், கற்றல், உபகரண பெட்டிகள், சத்துணவு பொருட்கள் போன்ற பொருட்கள் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து தலைமை ஆசிரியை சசிரேகா திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    Next Story
    ×