என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு- வாலிபர் கைது
- உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து வந்தனர்.
- அணைக்கட்டு போலீசார் ஹேமத்குமாரை கைது செய்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.15 ஆயிரத்தை மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அருகே கடுகுபட்டு கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வளாகத்தில் காணிக்கை உண்டியல் உள்ளது. நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஹெமத்குமார் என்பவர் மது போதையில் கோவில் எதிரே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோவில் சுற்றுச்சுவரை ஏரி குதித்து உள்ளே சென்றார்.
பின்னர் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருட முயன்றார். உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து வந்தனர். அவர்கள் வருவதை கண்ட ஹெமத்குமார் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அங்கு வந்த கிராம மக்கள் அங்கு நின்றிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த ஹேமத்குமார் என்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் போரில் அணைக்கட்டு போலீசார் ஹேமத்குமாரை கைது செய்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.15 ஆயிரத்தை மீட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்