என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்னக ரெயில்வேயின் முதன்மை இயக்க மேலாளரை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.
- பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களில் நிறுத்தம் தேவை என்று கோரிக்கையை முன்வைத்தார்.
- ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் குறித்தும் கோரிக்கை வைத்தார்.
சென்னையில் தென்னக ரெயில்வேயின் முதன்மை இயக்க மேலாளர் ஸ்ரீகுமாரை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து, மதுரை - புனலூர் விரைவு ரெயில் மற்றும் நாகர்கோவில் - கோட்டயம் ரெயில்களுக்கு நாகர்கோவில் டவுன், பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களில் நிறுத்தம் தேவை என்று கோரிக்கையை முன்வைத்தார்.
இதேபோல் தலைமை வணிக மேலாளர் நீனு அட்டெரயாவை விஜய் வசந்த் சந்தித்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் குறித்தும் கோரிக்கை வைத்தார்.
Next Story






