search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு
    X

    தாம்பரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு

    • மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் புதிய குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் புதிய குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி அங்கேயே பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை கட்டுமான பணிக்காக அங்கு இருந்த பலகைகளை எடுத்த போது நல்லபாம்பு ஒன்று படமெடுத்து சீறியது.

    இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    Next Story
    ×