search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் அருகே காருக்குள் புகுந்த பாம்பு: கார் முழுவதும் பிரித்து பார்த்தும் சிக்கவில்லை
    X

    ஆத்தூர் அருகே காருக்குள் புகுந்த பாம்பு: கார் முழுவதும் பிரித்து பார்த்தும் சிக்கவில்லை

    • காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது.

    ஆத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு கார் உள்ளது. தனது காரை பழுது பார்ப்பதற்காக ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள கார் பழுதுபார்க்கும் இடத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.

    காரை மணிகண்டன் ஓட்டி வந்தார். கார் புதுப்பேட்டை பகுதியில் வந்தபோது காருக்குள் முன் பகுதியில் நான்கடி நீளமுள்ள பாம்பு வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் ராஜேந்திரன் காரை சாலையின் ஓரத்தில் அவசரமாக நிறுத்தினர்.

    பின்னர் இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பாம்பு சிக்கவில்லை.

    தீயணைப்பு வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது. பாம்பு கிடைக்காத ஏமாற்றத்தில் தீயணைப்பு துறையினரும் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×