search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டு பயணி தவற விட்ட கைப்பையை திருடி நகை-பணம் அபேஸ் செய்த கணவன், மனைவி கைது
    X

    வெளிநாட்டு பயணி தவற விட்ட கைப்பையை திருடி நகை-பணம் அபேஸ் செய்த கணவன், மனைவி கைது

    • அலமேலு, அலெக்ஸிடம் இருந்த பணம் மற்றும் கை செயினை மீட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    சமயபுரம்:

    மலேசியாவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 52). இவர் தனது மனைவி வனிதா, மகள் பிரிதிகா. சந்திரன் மகள் பிரிதிகாவின் சிகிச்சைக்காக உறவினர்கள் 3 பேருடன் பாண்டிச்சேரி செல்ல திட்டமிட்டார். இதற்காக நேற்று அதிகாலை அவர்கள் திருச்சி வந்தனர்.

    காலை 6 மணியளவில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு பின் சமயபுரம் அருகே உள்ள அக்கரைபட்டி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் சமயபுரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் ஓட்டலில் சாப்பிட சென்றனர்.

    அப்போது சந்திரன் கையில் இருந்த பையை மறந்து ஓட்டலில் விட்டு சென்றார். சந்திரன் குடும்பத்தினர் காரைக்குடி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது கையில் இருந்த பையை காணதால் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர்கள் காரைக்குடியில் இருந்து மீண்டும் சமயபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு வந்து விசாரித்தனர். அப்போது இந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அந்த உணவகத்தில் துப்புரவு பணியாளர் அலமேலு(34) என்பவர் சந்திரனின் கைப்பையை எடுத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதனை அடுத்து சமயபுரம் போலீசார் அலமேலுவிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அலமேலு கைபையை எடுத்து தன் கணவர் அலெக்சிடம் கொடுத்து அதில் உள்ள வெளிநாட்டு பணம் மற்றும் நகையினை எடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    இதை தொடர்ந்து அலமேலு, அலெக்ஸிடம் இருந்த பணம் மற்றும் கை செயினை மீட்டனர். பாஸ்போர்ட்டுகளை தான் எரித்து விட்டதாக போலீ சாரிடம் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×