search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி ஆவணம் தயாரித்து ரூ.24½ லட்சம் மோசடி: கணவன்-மனைவி உள்பட 5 பேர் மீது வழக்கு
    X

    போலி ஆவணம் தயாரித்து ரூ.24½ லட்சம் மோசடி: கணவன்-மனைவி உள்பட 5 பேர் மீது வழக்கு

    • ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஹார்விப்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்த சரவணன் மனைவி மேனகா (வயது 38). இவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில், "நான் ஆதீஸ்வரன் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். இந்த நிலையில் அவர்கள் "எங்களுக்கு படப்பாடி தெருவில் ஒரு வீடு உள்ளது. அதை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டனர். இதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

    இதனைத் தொடர்ந்து ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் என்னிடம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகும் அவர்கள் எனக்கு வீட்டை பத்திர பதிவு செய்து தர முன்வரவில்லை. எனவே நான் அவர்களிடம் இது தொடர்பாக கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×