search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமாபுரத்தில் மோட்டார் சைக்கிளை திருடி மது குடிக்க சென்றவர் கைது
    X

    ராமாபுரத்தில் மோட்டார் சைக்கிளை திருடி மது குடிக்க சென்றவர் கைது

    • போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
    • திருடிய மோட்டார் சைக்கிளுடன் மது குடிக்க வந்தபோது அசோக்குமார் சிக்கிக்கொண்டார்.

    ராமாபுரம் ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். இதனை இன்று காலை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

    இதுகுறித்து ராமாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதி அரசமரம் அருகே உள்ள மதுக்கடை முன்பு பாபுவின் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரிந்தது. திருடிய மோட்டார் சைக்கிளுடன் மது குடிக்க வந்தபோது அசோக்குமார் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×