search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூரில் மழைநீர் கால்வாய் பணியில் மின் வயர் துண்டானதால் ஒரு மணிநேரம் மின்தடை
    X

    அம்பத்தூரில் மழைநீர் கால்வாய் பணியில் மின் வயர் துண்டானதால் ஒரு மணிநேரம் மின்தடை

    • அம்பத்தூர் போலீஸ் நிலையம் எதிரே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது.
    • சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் மின்வினியோகம் சீரானது.

    அம்பத்தூர் போலீஸ் நிலையம் எதிரே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது தரையில் புதைக்கப்பட்டு இருந்த மின்வயர் துண்டானது.

    இதனால் அப்பகுதியில் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், அம்பத்தூர் கோட்ட செயற்பொறியாளர் மலைவேந்தன் மற்றும் உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து இரவோடு இரவாக மின் வயரை சரிசெய்தனர். இதனால் சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் மின்வினியோகம் சீரானது.

    Next Story
    ×