என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கந்திகுப்பம் அருகே பெண் கழுத்து அறுத்து கொலை- போலீசார் விசாரணை
- கந்திகுப்பம் அருகே பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள கனகமுட்லு தண்ணீர் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது40). இவர் ஆடுகள் மேய்க்கு தொழிலாளி.
இந்த நிலையில் நேற்று இவர் வழக்கம் போல் ஆடு மேய்க்கும் தொழிலாளி துரை என்பவருடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.
மதியம் இருவரும் ஜிடிமலை பெரியகல்குந்து பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் தனிதனியாக ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இருளர் காலனியை சேர்ந்த திம்மராஜ் (35) என்பவர் லட்சுமியுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்து தலையில் வெட்டியுள்ளார்.
இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு துரை மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் திம்மராஜ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து துரை கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கொலை செய்து விட்டு தலைமறைவான திம்மராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் பெண்ணை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்