search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் சாணி பவுடர் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
    X

    சேலத்தில் சாணி பவுடர் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி

    • காளியப்பனுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தற்கொலை முயற்சி அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றி வருபவர் காளியப்பன் (45). இவர் அன்னதானப்பட்டி, லைன்மேடு போலீஸ் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் காளியப்பனுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த காளியப்பன் வீட்டில் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி தெரிய வந்ததும் குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×