search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசியில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்
    X

    சிவகாசியில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

    • கட்சிகளின் வண்ணங்களின் அச்சிட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
    • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துணிகளை வைத்து தயாரிப்பதுதான் சிறப்பம்சமாகும்.

    சிவகாசி:

    ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் தேர்தல் வந்து விட்டாலே கட்சியினர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை கரைவேட்டி, கட்சிக்கொடி, தொப்பி, சின்னம் என எல்லாம் அதகளப்படும். அந்த வகையில் பிரசாரத்திற்கு தேவையான துண்டு பிரசுரம் முதல் சுவரொட்டிகள், பேனர்கள் அச்சிடும் பணிகளும் சூடு பிடிப்பது வழக்கம்.

    பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தற்போது அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், தொப்பி மற்றும் சின்னங்கள் பொறித்த அட்டை மற்றும் பிளாடிக் மாஸ்க் உள்ளிட்ட வைகளை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    அதன்படி தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மாநிலகட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சி பாகுபாடு இல்லாமல் இல்லாமல் அனைத்து கட்சிகளின் வரவேற்பு பேனர்கள், கட்சி கொடிகள், சின்னம், தோரணங்கள், துண்டு, தொப்பி ஆகியவை என அந்தந்த கட்சிகளின் வண்ணங்களின் அச்சிட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    குறிப்பாக இந்த தேர்தலுக்கான புதுவரவாக ஸ்டார் வடிவிலான கொடிகள் அனைத்து கட்சியினரிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், ஒரு ஸ்டார் கொடியின் விலை ரூ.2.50 பைசா தான். மேலும் 30 வகையான கொடிகள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துணிகளை வைத்து தயாரிப்பதுதான் சிறப்பம்சமாகும்.

    மேலும் தேர்தல் சமயத்தில் தான் விருதுநகர் மாவட் டம் சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளருக்கும் விற்பனையாளர்களுக்கும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து கட்சிக்கொடி தயார் செய்வதற்கு ஆர்டர் கொடுப்பார்கள். ஆனால் தற்பொழுது கட்சிக் கொடிகளின் ஆர்டர்கள் மந்தமாக உள்ளது.

    கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறியே இதற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 26 நாட்களே உள்ளதால் தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவியத்தொடங்கி உள்ளன.

    இந்த தேர்தலையெட்டி, மேற்கண்ட தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் ஒரு படி முன்னேற்றம் அடையும் என்றும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×