search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பெண் தற்கொலை செய்ததால் விசாரணைக்கு பயந்து கணவரும் மரணம்
    X

    புதுப்பெண் தற்கொலை செய்ததால் விசாரணைக்கு பயந்து கணவரும் மரணம்

    • போலீசார் கனகராஜை தொடர்பு கொண்டு மனைவி தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
    • போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பனூரை அடுத்த ஆலங்குட்டை ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 27). இவருக்கும், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சங்கீதா (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பின் கடந்த 2 மாதங்களாக அவர்கள் சங்கீதாவின் ஊரிலேயே வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் கனகராஜ், தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். நேற்று மாலையில் சங்கீதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் போனை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் பக்கத்து வீட்டுக்கு போன் செய்து தனது மனைவி போனை எடுக்கவில்லை, எனவே வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினர். இதனையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டிற்குள் தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் கனகராஜை தொடர்பு கொண்டு மனைவி தற்கொலை தொடர்பாக விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். இதனால் பயந்த அவர் குப்பனூர் ஆலங்குட்டை பகுதியில் உள்ள கரியன் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கீதா எதனால் தற்கொலை செய்து கொண்டார், கணவன்-மனைவி பிரச்சனை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடினார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கனகராஜ் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கிறார்கள்.

    Next Story
    ×