search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே கைக்குழந்தைக்கு பூச்சி மருந்து கொடுத்து தாய் தற்கொலை
    X

    பொன்னேரி அருகே கைக்குழந்தைக்கு பூச்சி மருந்து கொடுத்து தாய் தற்கொலை

    • கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் மனம் உடைந்த சிவசங்கரி பூச்சி மருந்தை குடித்து விட்டு, 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்தார்.
    • மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாயும், குழந்தையும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி (24). இவரது கணவர் நவீன்குமார் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கணவர் நவீன் குமார் குடிபோதையில் மனைவி சிவசங்கரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த சிவசங்கரி பூச்சி மருந்தை குடித்து விட்டு, 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்தார். இதில் மயக்கம் அடைந்த நிலையில் இருந்த சிவசங்கரியையும், குழந்தையையும் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாயும் குழந்தையும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் தாய் சிவசங்கரி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×