என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரே குடும்பத்தில் தாய்-2 மகன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
- பள்ளிப் பருவத்திலேயே மகன் போதை பழக்கத்துக்கு அடிமையானதை கண்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தாயின் நிலைக்கண்டு இரண்டு மகன்களும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சோமங்கலம் அடுத்த மலைப்பட்டு ரேணுகாம்பாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சிவராஜ். இவரது மனைவி சசிகலா (வயது35).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 10-ம்வகுப்பு படிக்கும் இளையமகன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது.
இதனை தாய் சசிகலா பலமுறை கண்டித்தும் மகன் கேட்கவில்லை. இதில் மனவேதனை அடைந்த சசிகலா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த 2 மகன்களும் தாய் மீதி வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து தாங்களும் தற்கொலைக்கு முயன்றனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் மயக்க நிலையில் இருந்த சசிகலா மற்றும் அவரது 2 மகன்களையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிப் பருவத்திலேயே மகன் போதை பழக்கத்துக்கு அடிமையானதை கண்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தாயின் நிலைக்கண்டு இரண்டு மகன்களும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்