என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்
- கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
- காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம், ஞாறான்விளையில் நடைபெற்ற குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியிருப்பிதாவது:-
வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய இளைஞர்கள் அதிகமாக பங்களிப்பு அளிக்க வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story






