search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை- கே.எஸ்.அழகிரி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை- கே.எஸ்.அழகிரி

    • பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும்.
    • ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும்.

    சேலம்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி அரசின் மேலும் ஒரு கொடுமையான திணிப்பு அக்னிபாத் திட்டம். பெற்ற சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ்.சிடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக குரலை நெறிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும்.

    ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் போல் தொண்டர்களிடம் ஆயுதம் கொடுக்க முயற்சிக்கிறார் மோடி. காங்கிரஸ் பொதுத்துறையையும், தனியார் துறையையும் வளர்த்தது. ஆனால் பா.ஜ.க. பொதுத்துறையை அழித்துவிட்டு தனியார் துறையை வளர்க்கிறது.

    பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும். ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் வருந்ததக்கது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை. பேரறிவாளன் செய்த குற்றத்தைவிட நளினி பெரிய குற்றம் செய்யவில்லை. கோவை சிறையிலிருக்கும் இஸ்லாமியர்களையும் விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

    குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க. தங்கள் கொள்கையை முறையாக பின்பற்றியுள்ளனர். திரவுபதி என்ற பெயருக்காகவே அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×