என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரட்டூர் மேம்பாலத்தில் லாரி மோதி வாலிபர் பலி
- ராஜேஷ் மோட்டார் சைக்கிளுடன் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது25). புதூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கொரட்டூர் கருக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி முந்தி செல்ல முயன்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய ராஜேஷ் மோட்டார் சைக்கிளுடன் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
விபத்தில் சிக்கி ராஜேஷ் பலியாகி கிடந்த போது அவரது செல்போனை அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் திருடி சென்றதாக தெரிகிறது.
இதனால் அவரை அடையாளம் காண்பதிலும், உறவினர்களுக்கு தகவல் கொடுப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






