search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழாவில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
    X

    ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழாவில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்

    • உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விராலிமலை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் 650 காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் திரளான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

    இங்கு காலை 8 மணிக்கு போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மேலும் தொடக்க விழாவுக்கு தி.முக மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தனித்தனியாக திரண்டு இருந்தனர்.

    அப்போது வி.ஐ.பி. களில் முதல் ஆளாக தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். உடனே போட்டிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    அப்போது தி.மு.க. தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

    அமைச்சர் வந்த பின்னர் தான் போட்டி தொடங்க வேண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வினர் தொகுதி எம்எல்ஏ விஜயபாஸ்கர் தான் ஆகவே அவர் போட்டியை தொடங்கி வைக்கலாம் என்றனர்.

    இதனால் விழா மேடையில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    பின்னர் அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி போட்டியை தொடங்கி வைத்தார்.

    1¼ மணி நேரம் தாமதமாக போட்டி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×