search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலாங்கரையில் தனியாக சென்றபோது கத்திமுனையில் மிரட்டி சிறுமியிடம் பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவர் கைது
    X

    நீலாங்கரையில் தனியாக சென்றபோது கத்திமுனையில் மிரட்டி சிறுமியிடம் பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவர் கைது

    • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஆட்டோவை ஓட்டிச்சென்றவர் ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கத்தியை காட்டி மிரட்டினார்.
    • சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்த டிரைவர் ஆட்டோவில் வைத்தே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்தார்.

    சென்னை:

    சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, நீலாங்கரை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் தனியாக சென்ற சிறுமியை நிறுத்தி பேச்சு கொடுத்தார். வழியில் இறக்கி விடுகிறேன்

    என்று கூறி ஏமாற்றி தனது ஆட்டோவில் சிறுமியை ஏற்றியுள்ளார்.

    பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்ற அவர் ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கத்தியை காட்டி மிரட்டினார். சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்த அவர் ஆட்டோவில் வைத்தே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்தார். பின்னர் ஆட்டோ டிரைவரின் பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி இதுபற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இதுபற்றி அடையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தன ர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் அடையாளம் தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் கைது செய்தனர்.

    ரோட்டில் தனியாக சென்ற சிறுமியை மடக்கி ஆட்டோவில் வைத்து மிகவும் துணிச்சலாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையடுத்து நீலாங்கரை பகுதியில் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×