search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு வருகிறது- எச்.ராஜா
    X

    அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு வருகிறது- எச்.ராஜா

    • இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
    • அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் சேகர்பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருச்சி:

    வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    6.7.2021 நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும் 2,000 கோவில்களை புனராவர்த்தனம் செய்வதற்கு பரிசீலிப்பதாக தி.மு.க. அரசு கூறி வருகிறது.

    தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையே தமிழக அரசாங்கத்திற்கு தெரியாது. நீதிமன்ற தீர்ப்பில் 44,000 கோவில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் 36,000 கோவில்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் சேகர்பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது.

    இதை வன்மையாக கண்டிப்பதோடு, கோவில்கள் அனைத்தையும் இந்து மக்கள் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இலவசங்கள் வழங்குவதற்கு, அதனை வழங்காமல் இருக்கலாம். ஏதோ பணமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×