என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
- கடந்த 21-ந் தேதி சந்தோஷ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
- கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 35) என்பவர் கடந்த 4 வருடங்களாக ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர், சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள சிந்தலகுப்பம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அதன் முதல்மாடியில் வசித்து வந்தார். கடந்த 21-ந் தேதி சந்தோஷ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






