search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது
    X

    கோப்புப்படம்

    கும்மிடிப்பூண்டி அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது

    • வாகன சோதனையில் அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த நந்தகுமார் (24), சரண் (22), வசந்த் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×