search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை வீரர் கக்கனுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.
    X

    விடுதலை வீரர் கக்கனுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.

    • கக்கன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விஜய் வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விடுதலை போராட்ட வீரர் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களுடைய நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    அன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து கக்கன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விஜய் வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், வட்டாரத் தலைவர் அசோக்ராஜ், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×